
சில கற்பனைச் சிதறல்களின் பதிவு... ஹைக்கூ (Haiku) வடிவத்தில் இருக்கும் சில வரிகளின் சாரத்தை வாசகர்களின் கற்பனைக்கே விடுகிறேன்.. என் பார்வையில் அவ்வரிகளின் சிந்தையை அறிய விரும்பினால் தங்களது கேள்விகளை பதிவு செய்யுங்கள்.. உடனடியாக பதில் அளிக்கிறேன்..

வாசலில் கோலம். காகத்தின் இரைச்சல். தெருநாய்வாயில் வறுக்கி.
தேனினும் இனிய அதிகாலை காப்பி. "ஏங்க காப்பில சக்கரை போடமறந்துட்டேன் ."
காகிதம் முழுவதும் விளங்க முடியா கிறுக்கல்கள். நூற்றுக்கு நூறு வழங்கிஆசை முத்தமிட்டேன் என் இரண்டு வயது கண்மணிக்கு!
தினமும் பணப்பை பார்க்கும் மனைவி.. காலணியில் உன் புகைப்படச் சுருள்.. ..
சுனாமி எச்சரிக்கை.. மீனவர்கள் இல்லாக் கடல்.. கடற்க் கரையில் ஒரு ஜோடி..
"ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்.. மிருக வதைப்பின் உச்சகட்டம்.."
"அம்மா ஒரு டம்ளர் பால்.. பசிக்குது.."
அப்பா: "டேய் ஒரு கிளாஸ் டீ கொண்டு வா.."
பிள்ளை: "சரி பா.."
"இந்தாங்க சார் டீ.."
எவனோ: "டீ எவளோங்க??"
இடம்: ஏதோ ஒரு கடை..
No comments:
Post a Comment