Tuesday, January 19, 2010

வசந்த காலங்கள்

வேலை வெட்டி இல்லாமல் இருந்த பொழுது எழும்பிய நினைவுகள் தாம் இவை . எனது சிறிய வயது அனுபவங்களின் தொகுப்பு. வாசகர்களை சந்தேகப்பட வைக்கும் சில பல வரிகள் யாவும் கற்பனையே :). 'ஆட்டோகிராஃப்' நினைவுக்கு வருகிறது என்று தாங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. எனக்கு நேர்ந்ததும் சராசரி இந்திய சிறுவனின் அனுபவங்கள் தான்.


இன்பம் துன்பம் மற்றும் பல...

  • ஐந்தாம் வகுப்பில் அடைக்காமல் விட்ட 2 ரூ 50 பைசா தாத்தா பெட்டிக் கடை பாக்கி.
  • முதலும் கடைசியுமாய் அறியாமல் குடித்த கோழி ஸூப்.
  • நண்பனிடம் கேட்டு நிரப்பிய கோடிட்ட இடங்கள்.
  • ஸ்கோர் ஏற்றி வெற்றி பெற்ற கிரிக்கெட் போட்டிகள்.
  • இரவல் வாங்கி உடைத்த நண்பனின் கிரிக்கெட் மட்டை.
  • திருடித் தின்ற தாத்தா கடை தேன் மிட்டாய்கள்.
  • முதல் பேருந்துப் பயணம், பயனச்சீட்டின்றி!.
  • இந்தி வகுப்பு முன் வரும் வலிக்காத தலை வலிகள்.
  • தாளம் போட்டு உடைத்த வகுப்பறை பெஞ்சு.
  • சலூன் கடைத் தூக்கம்.
  • அடுத்த தெரு அனிதாவின் கடைக்கண் பார்வை.
  • 'கெடலை பெறி' அண்ணனின் 'கடலை பொறி'
  • பல்லில்லாமல் பக்கோடா கடிக்கும் தாத்தா.
  • பாட்டி வெடிக்கும் கொள்ளுப் பட்டாசு.
  • கழுகுகளிடம் இருந்து காப்பாற்றிய பூனைக் குட்டிகள்..
  • மாறி மாறி வாங்கிய ஐந்து நாய்க் கடிகள்..

    மேலே கூறியவை நூற்றில் ஒரு பங்கு தான்.. மற்ற அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன்..

No comments: