இந்தப் புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். அதன் தாக்கம் இன்றும் குறையவில்லை. சிகாகோவின் அரசு குடியிருப்பில் வாழும் இரண்டு சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையை துல்லியமாக பதிவு செய்கிறார் அலெக்ஸ். பரோவா (Pharoah), லபெயட் (Lafeyette) தினமும் எதிர்கொள்ளும் எண்ணிப்பார்க்க முடியாத வன்முறைகள் நெஞ்சை உலுக்குகின்றன. அவர்களின் இரண்டு வருட வாழ்க்கையை நாட்குறிப்புகளினூடே எந்தவித சமரசமும் இல்லாமல் உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.
அவர்கள் உலகம் முற்றிலும் வேறுபட்டது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நரகம். சிகாகோ போன்ற பெரு நகரங்களின் அகநகரங்கள் (inner cities) பெரும்பாலும் தொழிற்சாலைகளற்று, வேலைவாய்ப்புகள் இன்றி ஏழ்மையில் தத்தளிக்கின்றன. அத்தகைய சூழலில் வாழும் இவர்களுக்கு சிறுவர்களாக இருக்கவும் வாழவும் வாய்ப்பே இல்லை. சக நண்பர்களின் மரண ஓலங்களுக்கிடையே படிப்பதும், விளையாடுவதும் எப்படிச் சாத்தியம். இது ஊடகங்கள் வெளியே காட்டாத இன்னொரு உலகம், இன்னொரு அமெரிக்கா. இந்தப் புத்தகம் ஊடகவியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அனைத்து நாடுகளிலும் அகநகரங்கள் இந்த நிலையைத் தான் எதிர் கொள்ள நேரிடுமோ என்று நினைத்தால் பதைபதைக்கிறது.
மேற்கோள்கள்