
சூரியன் உறங்கச் செல்லும் தருவாய். தனியாக அமர்ந்திருந்தான். அமெரிக்காவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மெக்ஸிக்கன் உணவகம் அளித்த நீடிக்காத நிம்மதி அவனை ஆட்கொண்டிருந்தது. புர்ரிடோ பௌல் (Burrito Bowl), வெறும் சாதத்தில் கூட்டை பிசைந்து உண்ணும் பிரம்மையை அவனுக்கு ஏற்படுத்தியது. சைவம் தான் சாப்பிடுவான். மிருக வதைப்பை விரும்பாதவன்.
மொத்தம் உணவகத்தில் அவனைத் தவிர மூன்று பேர் இருந்தனர். ஒரு காதல் ஜோடி, ஆரத் தழுவிக் கொண்டே உணவருந்திக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவன் மனம் ஒரு துணைக்காக சற்று ஏங்கியது. வாழ்க்கையில் துணையுடன் வாழ்வது தனது சுதந்திரத்தை பாதிக்கும் என்று எண்ணி தன்னை சாந்தப்படுத்திக்கொண்டான். ஆனால் நிஜத்தில் தனிமையை வெறுத்தான்.
மனம் எதிர்காலத்தை எண்ணி வருந்தியது. தன்னை அறியாமல் குவளையில் உள்ள பாதி உணவை காலி செய்திருந்தான்.
"அடுத்து என்ன செய்யலாம்."
மெக்டோனல்ட்ஸ் சென்று ஒரு ஷேக் குடிக்கலாம் என்றது அடிமை மனது. மூளையின் ஏதோ ஒரு பகுதி அது கொழுப்பு சத்து நிறைந்தது என்று வலியுறுத்தியது. காதல் ஜோடி இடத்தை காலி பண்ண ஒரு மணி நேரமாவது ஆகும் என்று தேவையில்லாமல் கணித்தது மூளை.
உண்டு முடித்தான். மணி எவ்வளவு என்று தெரியவில்லை. கடிகாரம் அணியும் பழக்கம் இல்லை. பொருள் மீது சிறிதும் ஈடுபாடு கிடையாது. அமெரிக்காவில் அவன் இது வரை ஷாப்பிங் செய்யவில்லை. எதையும் தேவை இருந்தால் ஒழிய வாங்கமாட்டான். அதற்கு சோம்பேறித்தனமும் ஒரு காரணம். கார் இல்லாமல் ஒரு நிமிடம் இருக்க இயலாத இந்தப் பிரதேசத்தில் ஒரு வருடம் கார் இல்லாமல் வாழ்திருந்தான். ஓட்டவும் தெரியாது.
"எவ்வளவு கார்கள். எங்கிருந்து வருகிறது எரிபொருள். இவர்கள் ஒரு தேசமே இவ்வளவு நுகர்ந்தால் மற்றவர்கள் என்ன செய்வது. நமது வருங்கால சந்ததியர் என்ன செய்வார்கள்." இந்தக் கேள்வியை அவன் மனதில் செதுக்கியிருந்தான். காபிடளிசதில் (Capitalism) துளியும் நம்பிக்கை கிடையாது.
இப்பொழுது கோடை விடுமுறை. கல்லூரியில் ஒரு ஈ காக்கா இல்லை.
"கிடார் கிளாஸ் வேறு செல்ல வேண்டும்."
திடீர் என்று ஒரு நாள் கிடார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து சேரவும் செய்திருந்தான். ஆனால் மனதளவில் ஈடுபாடு கிடையாது.
கணிப்பொறியியல் மேற்படிப்பு படிக்கிறான். அதிலும் ஈடுபாடு கிடையாது. வாழ்வில் என்ன வேண்டும் என்று தெரியாத பல கோடி பேரில் ஒருவன். வாழ்வின் அர்த்தம் என்ன என்று நிறைய யோசித்து ஒரு தீர்வும் கிடைக்கவில்லை அவனுக்கு. நிறைய தத்துவ மேதைகளின் கருத்துக்களை அரை குறையாக தெரிந்து வைத்திருந்தான். இறுதியில் வாழ்கைக்கு அர்த்தம் என்று ஒன்று கிடையாது என்று முடிவு செய்திருந்தான்.
"வாழ்கையின் அர்த்தமின்மை தான் மனிதனை வாழ்க்கைக்கு அர்த்தம் தேட வைக்கிறது என்று ஒரு அறிஞர் சொன்னார். அது எவ்வளவு உண்மை."
நாத்திகவாதி. விதி என்று எதுவும் கிடையாது. அனைத்து நிகழ்வுகளும் இலக்கில்லாமல் நேருவதாக நம்புபவன்.
"நான் தேரமாட்டேன். எத்தனை தடைகள் என்னிடம். கூச்ச சுபாவம். புத்தியின்மை. சோம்பேறித்தனம். எதையும் ஒழுங்காக செய்வது கிடையாது. நண்பர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கூடிப் பழகும் தன்மை சிறிதும் இல்லை. இருந்த நகைச்சுவை உணர்வும் சுவடே இல்லமால் மறைந்து விட்டது. நான் வாழத் தகுதி இல்லாதவனா?. இந்த உலகம் என்னை விழுங்கிவிடுமா? "
"மனிதன் இவ்வளவு தூரம் உலகை கட்டுக்குள் கொண்டு வர அறிவு தான் காரணம். அறிவைக் கொண்டு மனிதன் பல்வேறு கருவிகளை படைக்கிறான். அவற்றை துல்லியமாக உபயோகிக்கவும் செய்கிறான். நான் கருவிகளை உபயோகிப்பதில் முற்றிலும் சோடை போகிறவன். நான் தற்கொலை செய்து கொண்டால் என்ன? இத்தனை மனப் போராட்டங்களும் தேவைதானா? "
"மாட்டேன். மாட்டேன். தற்கொலை மட்டும் செய்து கொள்ளவே மாட்டேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று கிடையாது. அதெல்லாம் வெறும் கட்டுக்கதை. இறந்தால் அனைத்தும் மறைந்து விடும். மிஞ்சுவது ஒரு வெற்றிடம். இந்த பூமியில் தோன்றுவது எவ்வளவு ஆச்சர்யமான விபத்து. அதை நானே முடித்துக்கொள்வதா? முடியாது. நான் வாழ்ந்தே தீருவேன்."
எவற்றிலும் ஈடுபாடு இல்லாதவனுக்கு ஒன்று மட்டும் இன்பம் அளித்தது. எழுதுவது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் எந்த மொழியின் மீதும் ஆளுமை கிடையாது. தெரிந்த வார்த்தைகளை போட்டு கிறுக்குவான். நிறைய எழுதுவான். ஆனால் யாரிடமும் காண்பிக்க மாட்டான். தாழ்வு மனப்பான்மை தான் காரணம். இப்படியும் ஒருவன் உலகில் இருக்க முடியுமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொள்வான்.
"நான் எழுதப்போகிறேன். அதனால் பயன் கிடைக்குமோ கிடைக்காதோ நான் எழுதுவேன். யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ நான் எழுதுவேன். எழுத்தாளராக வரவில்லை என்றாலும் பரவாயில்லை நான் எழுதுவேன்."
மடிக்கணினியில் ஸ்டீவ் மில்லரின் டான்ஸ் டான்ஸ் டான்ஸ் பாட்டு ஒலிக்க இந்தக் கதையை எழுதத் தொடங்கினான்.
12 comments:
very good Arun..though scared a bit because of your thought process, happy with the way the story ends.. you have improved a lot with the style and story narration too da..keep it up and keep writing.
superb! i was able to recollect every moment of truth behind this story and the discussions we both had. nice ending with a positive note. keep writing more and more.
machi, good one da. hereafter he can't say he doesn't have command over any language...:)
great one. enjoyed reading
the best of among creations so far...i was caught by its narration. it was so deep. I felt i was there in each of the moment u have written.. You have improved way tooooo much.. Kudos bro..keep writing.
machan super da!... amazing write-up. As everyone said the ending is good. in fact awesome!.
Thanks guys :).. Amazing comments.. I will write more and torture you guys for sure :)..
shall we hang out tonight? :)
Do you want to hang out tonight? :)
Good post dude :)
very good attempt...
keep it up
superb!! few felt like you.nice narration
Post a Comment